உன்னால் தவிக்கிறேன் ..!
கறுப்பு தார் வீதியிலே
கட்டழகு நடக்குது
கன்னிப்பூ அது ஒன்றை
கால் இரண்டு துரத்துது
பூ வாசம் அது வீச
புது மனது வாடுது
பூகம்ப நில அதிர்வாய்
பூ மனது அதிருது
இடை காட்டும் உன்னழகு
இதயத்தை வருடுது
இளம் நெஞ்சே உனைதழுவ
இரு விரல்கள் துடிக்குது
கால் பிடித்த நடை பிடித்தே
கால் இரண்டு நோகுது
கட்டழகு உன் கூந்தல்
கண் இமையை மறைக்குது
உனை பார்த்த நாள் முதலாய்
உறங்க விழி மறுக்குது
உன் உதட்டு மொழி கேட்க
உள் மனது துடிக்குது
என் மனதை தொலைத்து விட்டேன்
ஏ நெஞ்சே பேசயா
என் ஏக்கம் தனித்துவிட
என் அருகில் கூடாயா !
வன்னி மைந்தன்
ஆக்கம் 06-02-2022