இலங்கை ஐநாவில் தப்பியதா – வைக்க பட்ட ஆப்பு

Spread the love

இலங்கை ஐநாவில் தப்பியதா – வைக்க பட்ட ஆப்பு

இலங்கை புரிந்த தமிழ் இன படுகொலை தொடர்பாக அந்த ஆட்சியர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி ,

நீதி காணப்பட வேண்டும் என தமிழர் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது ,ஆனால் மேற்குலகமும் இந்தியாவும் தமது நலனை முன் நிறுத்தி சதுரங்க ஆட்டத்தை நடத்தி வருகின்றனர்

ஆளும் இலங்கை பவுத்த பேரினவாதிகளே தமிழர்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்பதாக இந்த மொழிவில் கூற பட்டுள்ளது ,இது இலங்கைக்கு வழங்க பட்டுள்ள மேலும் ஒரு கால

அவகாசமாக மாறியுள்ளது ,இவர்கள் நீதி வழங்கா விடின் ,கலப்பு நீதிமன்றம் ,அல்லது சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படுவார்கள் என சுட்டி காட்ட படுகிறது

அப்படி என்றால் மீளவும் பந்தை அடித்து இலங்கையின் காலில் வழங்கியுள்ளது ஐநா,இப்பொழுது ஆடுகளத்தை இலங்கையே திறந்துள்ளது ,

ஆட்டம் முறையாக ஆட தவறின் அது பெரும் நெருக்கடியில் இலங்கையை அழைத்து செல்லும் ,அதாவது விளங்க

சொல்லின் ,மைதானம் இன்றி விளையாட்டுக்கு இலங்கை செல்வது போன்ற நிலை ஏற்படும் வாய்ப்புக்கள் என்பதே இந்த விளையாட்டின் மறுபக்க பார்வையாகும்

ஏமாற்ற பட்டது தமிழர்கள் தான் ,ஆனால் தொடர்ந்து அந்த மக்களை ஏமாற்ற முடியாத நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும் ,

அதற்கான அறவழி போராட்டங்கள் தொடர வேண்டிய நிலையில் தமிழர் தேசம் தள்ள பட்டுள்ளது என்பதே நிகழ்வின் நிகழ்வுகளாக உருமாற்றம் பெற்றுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *