இலங்கையில் தமிழர் தாயாக தேசிய மீட்புக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என பரப்புரை புரிந்து, உலக நாடுகளில் அதற்கு தடையை ஏற்படுத்திய பங்கு இந்தியாவுக்கு உள்ளது
இந்தியா கொள்கை மாற்றம்
புலிகளை வளர்தே அதே இந்திரா காங்கிரஸ் ,அதே சோனியா ஆட்சியில் முற்றாக அழிக்க பட்டது ,
அதன் பின்னரான 12 ஆண்டுகளில் இலங்கையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம் ,சீனாவுடன் இலங்கை நட்பாக மாறியது ,அதனால் இந்திய பிராந்தியத்தில் பதட்டம் ஏற்பட்டது
இதனை அடுத்து தற்போது தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை போராளிகள் என இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் உரைத்திட ஆரம்பித்துள்ளது வியப்பை ஏற்படுத்துகிறது
புலிகள் நிலைப்பாடு
இந்தியாவே எமக்கு ஆதரவாக கரம் தரும் எனவும் ,அதனை எதிர்த்து நாம் செயல்பட மாட்டோம் என புலிகள் அழுத்தமாக கூறி வந்த நிலையில் ,ஒருவரது தனித்துவ ஆசைக்கு ,ஒரு விடுதலை அமைப்பு முற்றாக துடைத்து அழிக்க பட்டது
இந்தியா சீனா மோதல்
இப்பொது எழுந்துள்ள இந்த கொளகை மாற்றம், இலங்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த இந்திய விளைகிறது என்பதை அடித்து கூறலாம் .
இந்தியா சீன மோதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில், இதற்குள் தமிழர்களின் விடியலுக்கு தீர்வு காண வேண்டிய நிலைக்கு இந்தியா செல்ல வேண்டிய நிலை ஏற்பட போகிறது என்பதை சமகால நகர்வுகள் எடுத்து காட்டுகின்றன
தமது நலனுக்காக அவை எதனையும் எவ்வேளையும் செய்திட தயங்காது என்பதற்கு ,இந்த விடயங்கள் மீள ஒன்று சான்றாக மாற்றம் பெறுகின்றன