இருவர் வெட்டி கொலை – எகிறும் படுகொலைகள்

Spread the love

நுரைச்சோலை ஆலங்குடாவ பிரதேசத்தில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 43 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுத்ததால் தாக்கல் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையாளி இனங்காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.

    Leave a Reply