அடித்து கொன்று கடலில் வீசப் பட்ட அரசியல்வாதி சடலம் -அரங்கேறிய பயங்கரம்
இலங்கையில் இன்று காலை கடலுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட பிரதேச
சபை உறுப்பினர் ,கஜேந்திர குமார் ,அணியை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது
இவருக்கு முன் கூட்டியே மிரட்டல்கள் விடுக்க பட்டு வந்த நிலையில் ,அந்த கட்சியை இல்லாது அழித்து
,அவர்கள் செயல் பாட்டை முடக்கும் நகர்வில் இந்த கொலை இடம் பெற்றுள்ளது என அந்த கட்சியின் உள்ளக வாயிலாக கசிவுகள் வெளியாகியுள்ளன
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கேஜேந்திர குமார் அணியினர் ,விக்கினேஸ்வரன் அணியில் இணைந்து
போட்டியிட தயாராகி வந்த நிலையில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது
இவர்கள் அரசியல் பின்புலம் ,மற்றும் வெளிநாட்டு செயல் பாடுகள் ,அதன்
தொடர்ச்சி என்பன வற்றில் நிலவி வந்த அரசியல் ,வியாபார விளையாட்டின் காரணமாக இந்த படு கொலை இடம் பெற்றுள்ளது
இது அந்த கட்சியினருக்கு மட்டுமல்ல ,பிற தமிழர் கட்சிகளுக்கும் ஒரு அச்சுறுத்தும் செயல் பாட்டை உருவாக்கியுள்ளது
கடத்தி செல்ல பட்ட நபர் ஓசை படாமல் அடித்து கொலை செய்ய பட்டு ,கடலில் வீச பட்டுள்ளார் ,
இவர் கழுத்து நெரித்து கொலை செய்ய பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது
தற்போது இவர் நீரில் மூழ்கி இறந்தார் என கதை வசனம் எழுத பட்டு மரண சான்றிதழ் வழங்க பட்டுள்ளது ,ஆனால் இவரது முகத்தில் ,உடலில் உரசல் காயங்கள் உள்ளன .
இந்த காயங்கள் எப்படி வந்தது ..? இதற்கு பதில் இல்லை , கொஞ்சம் தமிழரகளே சிந்தியுங்கள் ,உள்ளே நடப்பது என்ன என்பதை
மர்ம கொலைகளின் ,சிறப்பு அத்தியாயம் இது என்பதை மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் .
அரசியல் கொலைகள் தொடராக இடம்பெற போவதற்கான முதலாவது அபாய எச்சரிக்கையை விடுப்பதாக இது உள்ளது என அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்