
வெற்ற பெற தனித்திரு
நேற்று என்னுடன் நேர்மையாய் இருந்தவர்
நெஞ்சில் ஏறி நேர் மிதித்தார்
பண்புடன் நாளுமே பழகி திரிந்தவர்
பாதியில் பகையாய் ஏனோ முளைத்தார் ..?
அன்பு காட்டியே அறநிலை சொன்னவர்
அந்தோ அவர் எதிரியாய் நின்றார்
இந்த நிலையில் இதயங்கள் மாறிட
இன்று இவ் நிலை ஏனென்று கூறார்
ஏதோ ஒன்றை ஏற்க மறுத்ததால்
எதையோ ஒன்றை எடுக்க முனைந்ததால்
ஆத்திர நிலையால் அலை கடலானர்
அக்கினி குழம்பாய் அப்படி கொதித்தார்
எத்திசை திரும்பினும் எழுந்தே வெடித்தார்
ஏனென்றெ கேள்விக்கு ஏதோ சொன்னார்
புத்தியை கிழித்தெரு புலனை மேய்ந்தால்
புன்னகை சொன்னது தப்பினாய் என்று
அப்படி சிந்தை அகலம் தந்தது
அப்படி நீயே தனித்திரு என்றது
வென்றிட தனிமையே தீரம் என்றது
வேகமாய் சிந்திக்க இதுவே உகந்தது
முடிவில் சோதனை முற்று பெற்றது
மூலமே வென்றிட தனிமையே என்றது
இறுதியில் தனிமையே எம்முடன் என்றது
இதனை உணர்ந்தே பயணி என்றது ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-04-2024
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா
- எழுந்து வா
- உயிராயுதம்
- யார் நீ
- முன்னாள் போராளிகள் அவலம்
- உன்னால் தவிக்கிறேன்
- அவளை தேடுகிறேன்
- சம்பந்தன் விடை பெற்றார்
- ஏன் துரோகம் செய்தாய்
- என்னை எரிக்காதே
- வந்து விடு
- படிக்க துடிக்கும் புத்தகம் நீ
- மங்கைகள் களம் புகுந்தது
- பதில் சொல்
- என் செய்வேன்
- முட்டை கண்ணு பார்வை
- நெஞ்சை பிளந்து உன்னை தேடி
- உன்னை பார்க்கையில