யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன .
இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக உடனடியாக எதுவும் தெரியவில்லை .
சடலம் தற்பொழுது மருத்துவமனையில்
மீட்கப்பட்ட சடலம் தற்பொழுது மருத்துவமனையில் வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் எவ்வாறு அங்கு இறந்த நிலையில் மீட்க பட்டது என்பது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது படுகொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை .
தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையின் முடிவில் மேலதிகமான விடயங்கள் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகிறது .
இலங்கையில் இறுதி யுத்தம்
இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தற்பொழுது பரவலாக மனித சடலங்கள் தமிழ் பகுதியில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிற விடயம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
நீண்ட நெடுங்காலமாக இதே பகுதியில் வசித்து வந்த இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள்உலவுகிறது .
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் படுகொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளி விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் என சொல்கிறது இலங்கை காவல்துறை.







