மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு
மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு ,மன்னாரில் இருந்த மருத்துவரின் உணர்வு ..மன்னார் இருக்கின்ற கறுப்புச் சட்டைக்கு இல்லையா?
மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றிய மருத்துவர்களில் கடமை உணர்வும் இன உணர்வும் உள்ள வைத்தியர் வைத்திய கலாநிதி வினோதன் அவர்கள்.
நான் அவரை கொரோனா காலத்தில் முதன் முதலாக தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் தொலைபேசி அழைப்பு ஒன்றால் உருவாக்கப்பட்டது.
கொவிட் உச்ச காலம் மடுமாதா ஆலயத்தின் திருவிழாவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக நான் வேலை செய்த ஊடக நிறுவனத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. யார் அனுமதி கொடுத்து என கேட்டதற்கு..
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் என அந்த அழைப்பில் பேசியவர் கூறினார்.
நான் முதலில் அவரிடம் பேசவில்லை அக் காலப்பகுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த ஸ்டான்லி டிமலிடம் குறித்த விடையம் தொடர்பில் பேசினேன் .
அவர் கூறினார் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகடன் குறைந்த அளவிலான பக்தர்களுடன் திருவிழாவை மேற்கொள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வினோதன் செய்யலாம் என்றார் நானும் அனுமதி கொடுத்துள்ளோம் என்றார்.
ஏதேனும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளில் பிரச்சினை இருந்தால் கூறுங்கள் சரி செய்வோம் வைத்தியருடன் பேசுங்கள் என்றார்.
வைத்தியர் வினோத்துக்கு தொலைபேசி எடுத்தேன் நான் யார் என்பதை கூறிவிட்டு மடுமாத திருவிழாவுக்கு பக்தர்கள் செல்லலாமா சுகாதார பிரச்சினை இல்லையா எனக் கேட்டேன்.
தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பில் தவறிழைத்த வைத்திய துறையை காப்பாற்ற பலர் முயன்றாலும் ஒரு மருத்துவராக தவறானவற்றை தவறு என சுட்டிக் காட்டியுள்ளார்.
குருதிப் போக்குடன் வந்த தாயை பல தடவைகள் தனியாக குளியல் அறையில் கழுவி வரும் படி கூறியது மிகப் பொரும் தவறு என கூறியுள்ளார் மருத்துவர் வினோதன்.
அது மட்டுமல்லாது உயிரிழந்த பெண்ணுக்காக யாராவது பொது நோக்கமுள்ள சட்டத்தரணிகள் ஆஜராக முன்வாருங்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்கத் தயார் என்றார்.
துரதிஸ்ரம் கறுப்புச் சட்டை அணிந்த மனிதாபிமானம் உள்ளவர்கள் மன்னாரில் இன்னும் முன்வரவில்லை..
- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

- ஹொரானாவில் ஐஸ் போதைப்பொருளுடன் தனியார் பயிற்சி மைய உரிமையாளர் கைது

- மாட்டி கிட்ட மோசடி நபர்கள்

- 20 மில்லியன் கொள்ளை வழக்கில் சாந்தா பண்டாராவின் மகன் மற்றும் 4 பேருக்கு ஜாமீன்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 82 000 ஐத் தாண்டியது

- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61








