மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை- இலங்கையில் நடந்த பயங்கரம்

Spread the love

மகளை கர்ப்பம் ஆக்கிய தந்தை- இலங்கையில் நடந்த பயங்கரம்

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ தோட்ட பகுதி ஒன்றில் 15 வயது மகள் கர்ப்பம் தரித்த சம்பவம்

தொடர்பில் தந்தையை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (25) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமி வயிற்றுவலி காரணமாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பொகவந்தலாவ

வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா, கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பரிசோதனைக்கு ஈடுபடுத்தபட்ட போதே குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக,

வைத்தியசாலையின் ஊடாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதற்கு அமைய சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *