வைரஸ் நோய்த் தொற்றுக்கு சுமார் 80,000 பேரை பாதிப்பு

Spread the love

வைரஸ் நோய்த் தொற்றுக்கு சுமார் 80,000 பேரை பாதிப்பு

சீனாவில் தோன்றி பல நாடுகளிலும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து

உயர்ந்து வருவது பொதுமக்களை அச்சத்திலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதல் முறையாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்கு

இதுவரை சுமார் 77,000 க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. உலகளவில் இந்த நோய்த் தொற்று சுமார் 80,000 பேரை பாதித்துள்ளது.

இதனிடையே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,700 ஐ கடந்துள்ளது.

பலி மற்றும் நோய்த்தொற்று எண்ணிக்கை சீனாவில் குறிப்பாக வுஹான் மாகானத்தில் தான் அதிகம் உள்ளது. சீனாவை தொடர்ந்து

தென் கொரியாவில் தான் கொரோனா வைரஸ் அதிக பேரை பாதித்துள்ளது. அங்கு 970 பேர் இதுவரை பாதித்துள்ள நிலையில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இதேபோல ஐரோப்பாவில் அதிக அளவாக இத்தாலியில் 270 பேருக்கு நோய்த்தொற்றும், 10 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் 14 பேர் பலியாகியுள்ளனர்.

வைரஸ் நோய்த் தொற்றுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *