மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது
மகனைச் சித்திரவதைசெய்த தந்தை கைது ,தான் பெற்ற மூன்று வயது சிறுவனுக்கு உணவு கொடுக்காமல் அவனை சித்திரவதை செய்து தற்கொலை செய்து கொள்வோம், என மிரட்டி வந்த தந்தை தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
மனைவி வெளிநாட்டில் வேலை புரிந்து வருகின்ற நிலையில் அவர் பணம் கேட்டு மனைவியை தொல்லைப்படுத்தியிருக்கின்றார் .
ஆனால் மனைவி பணம் அனுப்புவதை நிறுத்தியதை அடுத்து தனது மூன்று வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி உணவு கொடுக்காது அவரை உதைத்து வந்துள்ளார்.
நாங்கள் உணவின்றி இறந்து விடுவோம் என தந்தையார் மிரட்டி வந்த காணொளி ஒன்று மனைவிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த காணொளியை மனைவி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு தனது குழந்தையை காப்பாற்றும்படி கூறியதை அடுத்து தற்பொழுது போலீசாரால் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆடம்பரச் செலவுகளில்
மனைவியுடைய பணத்தை பெற்று அவர் குடித்து ஒரு ஏற்ற மாதிரி வந்ததாகவும் ஆடம்பரச் செலவுகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதனால் மனைவியினுடைய பணத்தினை மாதம் எதிர்பார்த்து வந்ததாகவும் அதனாலயே மனைவி பணத்தை கொடுக்க மறுத்து வந்த காரணத்தினால்
தான் பெற்ற மூன்று வயது சிறுவனை பட்டினி போட்டு அவனை படுக்கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் சிறுவர்கள் வதை குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளுக்கு தமது குடும்பத்தை காப்பாற்றும் பணிக்கு சேர்ந்த பெண்களுடைய குடும்பங்கள் இவ்வாறான பல சீரழிவுகளை சந்தித்து வருவதும் பெண்கள் தவறான வழியில் ஈடுபட்டார்கள் எனக்கு தெரிவித்து
அந்த குடும்பங்கள் விவாகரத்து பெற்றுள்ள சம்பவங்களும் அதிகரித்து காணப்படுகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி








