பிரிய முன்னர் அழும் விவாகரத்து

Spread the love

{ facebook name - vannimainthansong } click here my personal facebook

{ facebook name - vannimainthantiktok } CLICK MY FACEBOOK PAGE LINK FOLLOW pls

பிரிய முன்னர் அழும் விவாகரத்து

தாலி தந்தான் கேவல மாக்கி
தாரங்கள் உலவுவதோ ..?- வரும்
காலங்கள் கூடியே மகிழ்வு ஏறியே
காலங்கள் கழிந்திடுமோ …?

வாடியே கிடந்த வாழ்வினில் வந்தான்
வழியெங்கும் தூற்றுவதோ ..?- கொடும்
கேடுகள் தூவியே ஆடிடும் பெண்ணே – தாலி
கேள்வியே ஆகும் நன்றே ….

இணைந்தவர் பிரிதல் இதயத்தில் வலிகள்
இன்றே புரிந்து விடு – நாளை
கூடியே வந்தவர் கூவியே திரிவர்
குற்றங்கள் குழி தோண்டும்

ஆறாம் அறிவால் ஆள் மனம் ஒன்றை
ஆர தழுவி எழு – தவறும்
கால பிழையால் கசங்கும் வாழ்வில்
கண்ணீர் சுமையாகும் ….

ஆடவர் கூட கணவனும் ஓட
ஆக்கினை புரிகின்றீர் – ஊடல்
தெரிந்தும் மறைத்து தெரியா நடிக்கும்
தெளிந்தவன் கணவனடி……

பிரிய முன்னர் அழும் விவாகரத்து
பிரிய முன்னர் அழும் விவாகரத்து

ஊரின் பழிக்கு உன்னை அழைக்கும்
ஊனம் கலைந்து விடு ….
வாழ்வு தேறின் வழியை விட்டு
வாழ பழகி விடு …..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -30/12/2017

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply