பட வாய்ப்பு இல்லாததால் பாதைமாறிய பார்வதி

Spread the love
பட வாய்ப்பு இல்லாததால் பாதைமாறிய பார்வதி

தமிழில் பூ, மரியான், பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பார்வதி. ஆனால் சமீபகாலமாக அவருக்கு மலையாளத்திலும் தமிழிலும் பட வாய்ப்புகள் இல்லை. அவர் சில காலத்திற்கு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என அவரே முடிவு எடுத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மலையாளத்தில் பிரபல இயக்குனர்களான வேணு மற்றும் ஆஷிக் அபு உள்ளிட்ட 4 இயக்குனர்கள் இணைந்து உருவாக்கும் ஆந்தாலஜி படத்தில் இடம்பெறும் நான்கு குறும்படங்களில் ஒன்றில் கதாநாயகியாக நடிக்கிறார் பார்வதி. இந்த நான்கு கதைகளுமே பெண்களை மையப்படுத்தி அவர்களை கதாநாயகர்களாக முன்னிலைப்படுத்தி உருவாக இருக்கிறதாம்.

பார்வதி

வேணுவின் டைரக்‌ஷனில் உருவாகும் குறும்படத்தில் தான் பார்வதி நடிக்க இருக்கிறாராம். இதுதவிர பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள வர்த்தமானம் என்கிற படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *