
நீயே உனக்கு துணை
உள்ளம் வலிக்கும் போதினில
உன்னை செதுக்கி விடு
உதாசீனம் செய்யும் போதினில
ஊமையாய் இருந்து விடு
காலம் மலரும் போதினில
கபடங்கள் உடைத்து விடு
கபடம் இல்லா கண்ணியத்தை
கரை ஏற்றி வைத்து விடு
தோல்விகள் சூடும் வேளையில
சோரா இருந்து விடு
தவறை திருத்தி எழுந்திடும்
தகைமைகள் வளர்த்து விடு
பக்குவம் தேறும் பண்பயிலை
பகைமையிலும் காட்டி விடு
கடின மொழியை எறிந்தே
காதலை வளர்த்து விடு
உன்னை மட்டும் நம்பியே
உலகை பார்த்து விடு
உயிர் உள்ளவரை உனக்கு நீயே
உரிமம் புரிந்து விடு
வலிகள் தாங்கி எழுந்தால் தான்
வாழ்வு சீராகும்
வையம் ஆண்டிட இந்த
வலிகளே துணையாகும் .
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-12-2023
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா