சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் காமெடி கதைகளையே தேர்வு செய்தார்.சிவ கார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு முதல் படமான மெரினாவில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார்.
தனுசின் 3 படத்திலும் காமெடி நடிகராக வந்தார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா,
வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நகைச்சுவை நடிப்பு பேசப்பட்டது. வசூலையும் அள்ளியது.
ரஜினிமுருகன் படத்திலும் காமெடியில் கலக்கினார். அதன்பிறகு வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல்
என்று அதிரடி படங்களுக்கு மாறி வில்லன்களுடன் சண்டை போட்டார். இந்த படங்கள் காமெடி கதைகளுக்கு
இணையாக வசூல் பார்க்கவில்லை. மிஸ்டர் லோக்கல் நஷ்டத்தை சந்தித்தது.
சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்க தயாராகி உள்ளார்.
சிவ கார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு
விக்னேஷ் சிவன் இயக்கும் படமொன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது முழுநீள காமெடி படம் என்று கூறப்படுகிறது.
இதுபோல் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் அடுத்து
சிவகார்த்திகேயனை வைத்து டைரக்டு செய்யும் டாக்டர் படமும் காமெடி கதை என்று கூறப்படுகிறது. புதிய இயக்குனர்களிடமும் காமெடி கதைகள் கேட்டு வருகிறார்.சிவ கார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்க தயாராகி வருகிறது
விரைவில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த புதிய காதாபாத்திரத்தில் மனதில் நிலைத்து நிற்கும் வண்ணம்
சிவா நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது
தன்னை முழுமையாக சினிமாவில் இருந்து ஒழித்து கட்டிவிட ஒரு குழு முனைப்பு காட்டி வருவதாகவும் சிவா உள்ளக நண்பர்கள் வாயிலாக புலம்பி வருகிறார்
அதனால் தான் என்னவோ பட வெளியீடுகளின் பொழுது சிவா கார்த்திகேயன் மேடைகளில் கணீர் சிந்தி அழுது விடுகிறாராம்
படத்தை வெல்ல வைக்க சிவா தொடராக காண்பித்து வரும் இந்த தந்திரம் எதுவரை கை கொடுக்கும் என்ற பேராவல் நீண்டு செல்கிறது