சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மீண்டும் திறப்பு

Spread the love

சிறுவர் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் மீண்டும் திறப்பு

நாடு முழுவதுமுள்ள பகல்நேர பராமரிப்பு (Day Care Centre) நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார சேவைகள்

பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அனுமதி வழங்கியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் பகல்நேர பராமரிப்பு (பகல்நேர பராமரிப்பு நிலையங்களின் மொத்த பிள்ளைகளின் எண்ணிக்கைக்கான) நிலையங்களில்

உள்வாங்கக்கூடிய மொத்த கொள்திறன் எண்ணிக்கைக்காக அந்த நிலையங்கள் திறக்கப்பட்டு முன்னெடுக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

தற்பொழுதும் மீண்டும் திறக்கப்படும் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் 75 சதவீதமான கொள்திறனுடன் (சிறுவர்களின் எண்ணிக்கை) செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜூலை 06 ஆம் திகதியுடன் கொள்திறனை (சிறுவர்களின் எண்ணிக்கையை) 100 சதவீதமாக அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குவதாகும் தெரிவித்தார்.

இவ்வாறான அனைத்து பகல்நேர பராமரிப்பு நிலையங்களிலும் கொவிட் 19 வைரசு தொற்றில் இருந்து பாதுகாப்புக்காக

கடைபிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டி ஆலோசனைகள் வலுவான முறையில் கடைபிடிப்படுவது கட்டாயமாகும்.

சிறுவர் பகல்நேர
சிறுவர் பகல்நேர

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *