சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு
Spread the love

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு

சிரியாவில் பாரிய குண்டு வெடிப்பு ,சிரியாவில் பாரிய குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆயுத தொழிற்சாலை அல்லது அது தொடர்பான தொழிற்சாலை ஒன்று திடீரென வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் அங்கு பணிபுரிந்த ஐந்துக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் , பலர் காயமடைந்துள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூத படைகளினால் திட்டமிடப்பட்ட வகையில் .ஈரான் இராணுவ நிலைகள் ஆயுத சேமிப்பு களஞ்சியங்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

சிரியா நாட்டுக்குள் ஈரானுடைய ஆயுத நடமாட்டங்கள் ,அவர்களுடைய செயல்பாடுகளை முடக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் யூத படைகள் திட்டமிட்டு செயலாற்றுகின்றன .

அதனை அடுத்து ஈரானுடைய முழு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ,சிரியாவுக்குள் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இதன் பொழுதே பல தளபதிகளும் பல மில்லியன் பெறுமதியான ஏவுகணைகள் ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இங்கிருந்தே ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஏவுகணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தடுக்க முகமாகவே இந்த ஆயுத தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.

எனினும் இங்கு இடம் பெற்ற முழுமையான சேதவிபரங்கள் , என்ன நடந்தது என்பதற்கான முழுமையான விடயங்கள் வெளிவரவில்லை.

அவ்வாறு வெளிவருகின்ற பொழுது மேலதிக செய்திகள் இங்கு இணைக்கப்படும்.