சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு
Spread the love

சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

குரங்கிலிருந்து மனிதன்
பிறந்தானென்று
கூர்ப்பு விளக்குது – திரை
அரங்கினில் நின்று
தொங்குவதைப் பார்க்க
அதுவும் விளங்குது.

வருசா வருசம்
விஜய்யும் அஜித்தும்
திரையில் வருவினம். – இங்கு
வலியோடு வாழும் ஈழத்
தமிழன் வாழ்வுக்கு
என்ன தருவினம்?

கலையை மதிப்பதும்
அதனை ரசிப்பதும்
அவரவர் உரிமைகள் – அதற்குன்
நிலையை அழிப்பதும்
நினைவை இழப்பதும்
வாழ்விலென்ன பெருமைகள்.

ரொக்கெட் செலுத்தியும்
விக்கற் வீழ்த்தியும்
பொக்கெற்றை நிரப்புறார்கள் – நீங்கள்
டிக்டொக்கை அமத்தியும்
சீக்ரட்டை பத்தியும் ஏன்
மாக்கெற்றை இழக்கிறீர்கள்.

திரிஷா பிறநடிகைகள்
பெரிதா செய்ததை யார்க்கும்
தெரிந்தால் சொல்லுங்கள் – அல்லது
ஒரிசா பாலுவையும்
தெரேசா அன்னையையும் முடிந்தால்
உசிரா வணங்குங்கள்❗

-பிறேமா(எழில்)-