கொரோனா இல்லாத கடற்படையினர் விடுதலை
PCR பரிசோதனையின் மூலம் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட கடற்படை வீரர்கள் இருவர் நேற்று (07)
வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரிந்து வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட் -19
தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மேலும் 08 கடற்படையினர் சிகிச்சை பெற்று பூரண
குணத்துடன் 2020 மே 06 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 07 பேர் கொழும்பு கடற்படை பொது
வைத்தியசாலையிலும் ஒருவர் முல்லேரியாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்களின் பி.சி.ஆர் சோதனைகளில் இவர்களுக்கு வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி 2020 மே 06 ஆம் திகதி
அவர்கள் குறித்த வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர் மேலும், வைத்தியசாலைகளில் இருந்து
வெளியேறிய இந்த கடற்படை வீரர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு
தனிமைப்படுத்தப்படுவார்கள். இந்த நபர்கள் உட்பட கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 கடற்படை வீரர்கள் முழுமையாக
குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். என்று கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி







