கண்ணீரில் கரைகின்ற வாழ்வு ….!
பக்கத்தில நீ இருந்தும்
பாய் விரிக்க நேரமில்லை
பகலிரவு வேலையால
பார்க்க மனம் கூடவில்லை
உனக்கொரு முத்தமதை
உதட்டினில எழுதிவிட
ஆள் மனசு துடிக்கிறது
ஆனாலும் நேரமில்லை
பட்ட கடன் பாதியில
பாதிவழி துரைத்தையில
பாய்க்கின்று விடுமுறை தான்
பாவியுனக்கு கொடும் துயர்தான்
சொர்க்கத்தில வாழ்வென்று
சொல்லி வைத்த திருமணமோ
சொகமிழந்து வாடுறது
சோகமதில் தேய்கிறது
சிக்கனத்தை சிறைபிடிக்க
சீதேவி மறந்ததினால்
விழியிரண்டில் நீராச்சு
விழுந்து உடல் ஒடிந்தாச்சு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-03-2022