கடற்கரையில் சடலம் மீட்பு
கடற்கரையில் சடலம் மீட்பு , களுத்துறை பஸ் கடவ பாதியில் உள்ள கொட்டல் ஒன்றின் பின்பகுதியில் உள்ள கடற்கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .
இவ்வாறு சடலமாக அமைக்கப்பட்டவர் 70 வயதுடைய முதியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவர் இயற்கையாக மரணம் எய்தினாரா அல்லது திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அங்கு இவரது உடல் வீசப்பட்டதா என்பது தொடர்பில் தற்பொழுது போலீசார் விசாரணைகளை ஆரம்பித்து இருக்கின்றனர் .
மரண பரிசோதனை
சடலம் மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
மரண பரிசோதனை வெளியிடப்படுகின்ற தகவலின் அடிப்படையிலேயே இவருக்கு நடந்தது என்ன என்ற விடயம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
இலங்கையில் நாள்தோறும் நீரேரிகள் காடுகள் ,பாழடைந்த வீடுக; , மலசல கூடங்கள் என்பனவற்றில் இருந்து மனிதர்கள் சடலங்கள் மீட்கப்பட்ட வண்ணமே உள்ளது .
அதிகரித்து செல்லும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரித்து செல்லும் இந்த படுகொலை சம்பவங்கள் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது .
இந்து தொடராக இடம்பெற்று வருகின்ற இந்த படுகொலையின் பின்புறத்தில் உள்ளது யார்.
ஏன் இந்த படுகொலை தொடர்கின்றன என்பதற்கான கேள்விகளுக்கு இலங்கை குற்ற புலனாய்வு துறையிடம் இருந்து இதுவரை எதுவும் பதிலும் வழங்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது .











