ஏன் துரோகம் செய்தாய்

ஏன் துரோகம் செய்தாய்
Spread the love

ஏன் துரோகம் செய்தாய்

உன்னை தினம் நினைக்கையில்
உள்ளம் வாடுதே
உன்னோடு பேச நாளும்
உள்ளம் தேடுதே

கள்ளம் இல்லா உள்ளம் ஒன்றை
கனவு தாங்குதே
காலடியின் மண்ணெடுத்து
தலை தூங்குதே

கண் விழிக்கும் போதினில்
கால் சலங்கை அழைக்குதே
கண் இமையின் மேலே
கரும் கூந்தல் தழுவுதே

உன்னை நினைக்கும் போதெல்லாம்
உள்ளம் வாடுதே
ஊன் உறக்கம் தொலைத்து
உன்னால் சாகுதே

காண மறந்து போனதென்ன
காதல் இறந்த மாயம் என்ன
என்ன நினைத்து என்னை மறந்தாய்
எதற்காக என்னை இழிந்தாய் …?

ஆக்கம்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்