ஏன் இவள் இப்படியானாள் …?
கொட்டுகிற அருவியில
கொடி கூந்தல் விரிப்பவளே ….
கொடுக்கை அவிழ்க்க பாக்ககுதடி
கோர அலை தாக்குதடி ….
முடிச்சவிழ்ந்து போகுமென்று
மூசி அலை வீசுதடி …
அடி ஆற்று பக்கம் யாரும் வந்தா
அம்மணமே என் செய்வாய் …?
ஒத்தையில உன்னை வைச்சு
ஓடி விளையாடுதடி …
கட்டெறும்பா குத்தி தானே – தேகம்
காயம் வைத்து போகுதடி ….
வைச்ச கண்ணு வாங்காம
உச்சி வானம் பாக்குதடி ..
மஞ்சள் வெயில் வீசுறவன்
மடி தடவி போறாண்டி ….
ஒத்திருந்தது பேசிடவே
ஒர கண்ணனால் பார்ப்பவளே ..
கன்னி ராசி கொண்டவனோ
கள்ள சூரியன் திண்ணுறானே ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/10/2018