உன்னை மறக்க என் செய்ய …?
உன் பாடல் நான் கேட்டு ஆடவா ..? – தினம்
உன்னோடு நான் வந்து கூடவா ..?
ஏனோ இன்று நான் பாடும்
என் கீதம் நீ ஆனாய் …?
பாடி பாடி அழைத்தவளே
பாடி தேடி பார்க்கிறேன் …
என் தேகம் உள்ளுக்குள்ளே
என் செய்தாய் துடிக்கிறேன் …..
ஓடி வந்து காதுக்குள்ளே
ஓதி என்ன போகின்றாய் …?
ஏறி வந்து பார்க்கும் முன்னே
எங்கோ ஓடி மறைகின்றாய் …?
கனவாகி தினம் விழவே
கன்னி பூவே துடிக்கிறேன் ….
கனவுக்குள் வதைகள் செய்தேன்
கண்ணே நோக வைக்கிறாய் ….?
தலையாட்டி பாடும் குயிலே – உன்
தாலாட்டில் தூங்கிறேன் ….
ஏது செய்வேன் என் கிளியே
உனை மறக்க கூறாயோ …?
-வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/07/2018