
உன்னால் தவிக்கிறேன்
கொண்டையில பூ மணக்க
கொலிஸ் ஒலி கால் ஒலிக்க
சாலையில போறவளே – முதுகு
சாளரத்தை காட்டுறியே
கெண்ட மீனு பார்வையாலே
கிண்டல் பார்வை செய்யிறியே
அங்கம் எல்லாம் தங்கா நகை
அணிந்து ஏனோ போகிறியே
பிஞ்சு மர பூவை போல
பிள்ளை நீ சிரிக்கிறியே
அஞ்சு முகம் உன்னைத் தானே
அப்படியே கொஞ்சி விட
காளை மனம் துடிக்குதடி
கலாட்டா செய்துதடி
பாழ் பட்ட பாவை உன்னால் – இந்த
பகல் ஒன்றை தொலைத்தேண்டி
எந்தன் நாளை நீ பறித்து
ஏங்க விட்டு போனவளே
கலோ சொல்ல மறுக்கிறியே
கஞ்ச தனம் காட்டுறியே .
ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
- செல்வன் பிறந்த நாளில் சிறார்களுக்கு உணவு வழங்கிய வன்னிமைந்தன் தளம் |Vanni mainthan
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
- என்னை அழைப்பாயா
- என்னை அழைக்காயா
- எழுந்து வா
- உயிராயுதம்
- யார் நீ
- முன்னாள் போராளிகள் அவலம்