ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்

ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்
Spread the love

ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்

ஈரான் நாட்டின் எல்லையோரமான ஈராக் வடக்கு பகுதியில் நிலைகொண்டுள்ள தீவிரவாத குழுவிடம் இருந்து ஏவுகணைகள் ,மற்றும் உளவு விமானங்கள் என்பன மீட்க பட்டுள்ளதாக ஈரான் புரட்சி படை அறிவித்துள்ளது .

தொடர்ந்து ஈராக் பகுதியில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகள் நிலைகள் மீது, ஈரான் இராணுவம் தேடி அழிக்கும் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது .

ஈரான் இராணுவத்தின், திடீர் இராணுவ நடவடிக்கையால் , தீவிரவாதிகளின் முகாம்கள் மற்றும் ,அவர் தம் கனரக ஆயுதங்கள் என்பன அழிக்க பட்டுள்ளது என்கிறது ஈரான் இராணுவம் .

ஈரான் இராணுவ நடவடிக்கை 73 ஏவுகணைகள் உளவு விமானங்கள் மீட்பு தொடரும் தாக்குதல்

தொடர்ந்து இடம்பெற்று வரும் அகோர தாக்குதலினால் ,ஈராக்கிய குருதீஸ் பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளன .

அமெரிக்காவின் ஆதரவுடன் போர் புரிந்து வந்த குருதீஸ் போராளிகளை பிரிட்டன் ,அமெரிக்கா என்பன கைவிட்ட நிலையில் , தமிழீழ விடுதலை புலிகளை போல அழிவின் விழிம்பில் குருதீஸ் அமைப்பு உள்ளது .

துருக்கி மற்றும் ஈரான் என்பன இணைந்து சமவேளை இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து வருவதால், குருதீஸ் போராளிகள் அமைப்பு திணறிய வண்ணம் உள்ளது .

தொடர்ந்து தாக்குதல்கள் வேகம் பெற்றால் ,புலிகளை போன்று குருதீஸ் போராளிகள் அமைப்பும் காணமல் போகும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *