ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி
ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி , சம்பவம் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை கொதிக்க வைத்துள்ளது.
ஈரானில் தங்கி இருந்து ஈரானுடைய கட்டட வரைபடங்கள் மற்றும் அது தொடர்பான ஆதாரங்களை திரட்டி, இஸ்ரேல் மொஸாட்டுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் வழங்கிய ஆதாரங்களுக்கு பல மில்லியன் ரூபாய் நிதிகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அவர் மேகொண்ட பண பரிவர்த்தனை விடயத்திலேயே அவர் சிக்கினார்.
ஈரான் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற நம்பகரமான தகவலின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டு ,தற்போது தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் முக்கிய இராணுவ தளபதிகள் அதிகாரிகள், உயர் மட்டங்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மொஸாட் சம்பவங்களை நடத்தி வந்தது.
அதனை அடுத்து தமது நாட்டுக்குள் ,படைகளுக்குள் ஊடுருவிய இந்த கறுப்பாடுகள் யார் என்பதை, கண்டறியும் வேட்டையை ஈரான் உளவுத்துறை ஆரம்பித்தது .
அதன் ஒரு அங்கமாகவே இவர் நீண்ட காலமாக விசாரணை செய்யப்பட்டு ,தற்பொழுது நீதிமன்ற நாள் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .
தனக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அந்த முக்கிய நபரை ஈரான் தூக்கிலிட்டதால் ,இஸ்ரேல் கொதித்துப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
- ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ‘பொருளாதாரப் போரை’த் தொடங்குகிறது

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலின் E1 குடியேற்ற விரிவாக்கத்தை பிரிட்டன் கண்டிக்கிறது

- ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்









