இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி  

இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி
Spread the love

இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி

 இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி ,பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கவைத்து இஸ்ரேலிய இராணுவத்தினர் தரை வழியாக பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

எட்டு மாதங்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் தரைவழியான இராணுவ தாக்குதலின் பொழுது, தமது படைதரப்பில் 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகி உள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் உத்தியோபூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற சரமாரியான தாக்குதலின் பொழுது நான்கு தளபதிகள் பலியாக இருந்தனர்.

இந்த நான்கு தளபதிகளின் பலி எண்ணிக்கையுடன் தற்போது ,தரைவழியான படை நடவடிக்கையின் பொழுது ,300 இஸ்ரேலிய அரச இராணுவத்தினர் பலியாக உள்ளதாக, இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தரைவழியாக ஆரம்பிக்க பட்ட தாக்குதலில்

இஸ்ரேல் தரைவழியாக ஆரம்பிக்க பட்ட தாக்குதலில் மட்டும் 300 படைகள் இறந்ததாக தெரிவிக்கின்றது .

ஆனால் இஸ்ரேல் உடைய இராணுவ உளவுத்துறை ஊடகங்களோ 5 பாட்டாளியன் படைகள் களமுனையில் இருந்து அகற்றப்பட்டும் , ஏறத்தாழ 8,000க்கு மேற்பட்ட இஸ்ரேலிய படைகள் பலியாக இருக்கலாம் என்று சுயாதீன தகவல் ஒன்று செய்திகளை வெளியிட்டு பர பரப்பை கிளப்பி இருக்கின்றது .

எனினும் இதனை இஸ்ரேலிய ராணுவம் உத்தியோக பூர்வமாக ஏற்கவில்லை.

5 பட்டாளியின் படைகள் முற்றும் முழுதாக களமுனையில் இருந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,அவ்வாறு அனுமதிக்கப்பட்ட படைகள் போர்முனைக்குச் செல்ல முடியாதவாறு அங்கவீனம் உற்றவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை போர்ப்படைகள் நடத்திய புதிய வகை தாக்குதல்

கமாஸ் விடுதலை போர்ப்படைகள் நடத்திய புதிய வகை ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் இந்த இழப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவித்து வருகின்றது .

இது பலஸ்தீனம் கமாஸ் போர்படைகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது .

காசா மக்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து ஈரானுக்கு ஆதரவான, ஐந்து போராளி குழுக்கள் இணைந்து பரம எதிரியான இஸ்ரேலை போட்டு தாக்கி வந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.