இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிரடி நடவடிக்கை
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மின்சாரம் தொடர்பான கருத்தாடல் நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் வவுனியா கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது மின்சார பாதுகாப்பு, மின்சார பொருளாதாரம் மற்றும் மின்சார தொழில்நுட்பம் என மூன்று துறைகள் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கை பொது பயன்பாட்டின் முன்னேற்பாடு அடிப்படையில் அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஏற்றவாறு மின்னியலாளர்களுக்கு உரிமம் வழங்குவதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த திட்டம் வருகின்ற மாதத்திலிருந்து நடைமுறைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் முக்கிய காரணம் மின்சார தாக்கத்தினால் ஏற்படும் மரணத்தினை குறைப்பதன் முகமாகவே இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவானது இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மின்சாரத்தை பாவிக்கும் சொக்கற்ஸ் பிளக்குகளுக்கு ஒரு ஸ்ராட்ன்ட் ஒன்றினை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் வட்டவடிவிலான அவற்றை இல்லாது செய்து சதுரவடிவிலான பிளக்குகளை கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் மின்சார வீண்விரையத்தை தவிர்க்கமுடியுமென அறிவுறுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் அரச அதிபர் எஸ். சமன்பந்துலசேன, பொதுபயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், தேசிய தொழிற் பயிற்சி அதிகாரசபை மாணவர்கள், மின் பொறியியலாளர்கள், மின் துறை சார்ந்த பலரும் குறித்த கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.









