இலங்கையில் கொரனோ அதிகரிப்பு – மன்னாரில் 3 குடும்பங்கள் தனிமை படுத்தல்

Spread the love

மன்னாரில் மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட உப்புகுளம் பகுதியை சேர்ந்த மூன்று குடும்பங்கள் வெள்ளிக்கிழமை முதல்

எதிர் வரும் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கில்றோய் பீரிஸ் இதனை தெரிவித்தார்.


கடந்த சில நாட்களாக சிறைச்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டமை காரணமாக சிறைச்சாலையில் தடுத்து

வைக்கப்பட்டிருந்த சில கைதிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகளுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

அவ்வாறு அனுப்பப்பட்ட நபர் ஒருவர் மன்னார் உப்புகுளம் பகுதியில் அவரது

வீட்டில் தங்கியிருந்த நிலையில் வியாழக்கிழமை மாலை மீண்டும் பரி சோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அதன் அடிப்படையில் குறித்த நபருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் உட்பட மூன்று குடும்பத்தினர் 14 நாட்களுக்கு

இவர்களது வீடுகளிளேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *