
இதயம் இருந்தால் இதற்கு பதில் சொல்
கத்தி வாய் அழுதாலும்
கை கட்டி நின்றாலும்
பொத்தி வாய் இருந்தாலும்
பொறுக்கலையே பொறுக்கலையே
சத்தி வாய் வயிறோடும்
சாகாத வாயதோடும்
நீள துயர் தோய்ந்து
நீளம் எது போவதுவோ
துடிக்காத இதயமும்
துயர் அறியா பேனையும்
இருந்தென்ன வாழ்ந்தென்ன
இருந்தென்ன வாழ்ந்தென்ன
உலக சட்டத்தின்
உவமானம் இதுவென்றால்
தமிழனுக்கு அவமானம்
தலை குனிகிறேன்
நிறையாத வயிறோடு
நீளம் நடக்கின்ற
கண்ணீர் துளிகளின்
கால் தடம் பாராய்
சொந்த நிலம் பறித்து
சோகத்தை நீயளிக்க
வெந்து நான் பார்க்கவோ
வேதனை சேர்க்கவோ
என் துயரை நீ பார்த்து
ஏளனமாய் சிரி
உன் துயரை நான் பார்த்து
உனக்காய் அழுவேன்
அடங்காத குணத்தோடு
அகிலத்தை ஆள்கின்ற
விளங்காத வாய்களின்
விலாசம் இதுவோ ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 7-11-2023
பலஸ்தீன யுத்தம் அல் அசாத் புயல்; நடவடிக்கையின் பின்னர் அழிக்கப்டும் மக்கள் கண்டு
- சமையல் பிரமாதம் நன்றி லண்டன் உதயன் அண்ணா |Vanni mainthan
- செல்வன் பிறந்த நாளில் சிறார்களுக்கு உணவு வழங்கிய வன்னிமைந்தன் தளம் |Vanni mainthan
- எனக்கொரு பதில் சொல்லாயோ
- உன்னால் தவிக்கிறேன்
- மன்னித்து விடு
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
- அழும் நீதி
- அர்ச்சுனா
- ஏன் அழுகின்றாய்
- அர்ச்சுனா எங்கள் அவதாரம்
- ஆறுதல் கூறி விடு
- வீர மகன் அர்ச்சுனா
- அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
- அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை