
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
என்பாட்டை என்பாட்டை நீ பாடவா
எனக்குள்ளே நீதானே எழுந்தாடவா
உனக்காக தானே நான் உயிர் வாழ்கிறேன்
உள்ளத்தை தந்தே உயிராகினேன்
கறுப்பென்ன சிவப்பென்ன ஒன்றாகினோம்
கலந்தாடி தானே மகிழ் வேற்றினோம்
உன்மொழி எனக்கு பலம் இட்டதே
உலகாழ எனக்கு வழி தந்ததே
நீயின்றி நானின்றி உலகாடுமா
நினைவுகள் இலலாமல் உயிர் வாழுமா
உன்போல உறவொன்றை நான் காணுமோ
உயிராகி நின்றாய் அது போதுமே
இல்லாமை இருக்கின்ற வேளையிலே
இதயத்தில் உன் பாசம் குறையலையே
இதுதானே நீ தந்த காதல் என்றேன்
இதயமே எந்நாளும் உனை தாங்குவேன் ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 01-08-2022
- உன்னில் நன் என்னை நம்பு
- இதயமே எந்நாளும் உனை தாங்குவேன்
- சிக்கன் கடை நாற்றம்
- எல்லாம் உன்னால் உனக்கு சமர்ப்பணம்
- கோபம் தவிர்
- உன்னை தா எனக்கு
- நீயே என் கவிதை
- ஆணி வேர் ஒன்று அறுந்தது
- நீ தான் மனிதன்
- உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் ..!
- உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!
- இவளுடன் வாழ விடு ..!
- தமிழன் அழிந்த நாள் ….!
- நினைவில் வைத்து கொள் …!
- இன்றே இறந்து விடு ….!