அழகிய வெள்ளச்சி ….!
பருவத்தில் உடைந்தவளே
பால் நிலவாய் பொழிய …
கூடுகள் வாடுதடி
குளிராலே நோகுதடி ….
மெல்ல மெல்ல நீ உருக
மேனி மெல்ல விறைக்க ..
உன்னை திட்டி உதடு பேச
உருகும் பனியே அழுதிடுவாய் …
முன் பகலின் வெண்பனியே
முழு நிலவாய் நிலம் வீழ்ந்து ….
மேகமாய் விரிந்தேன்
மேனி வதைக்கிறாய் …?
உடல் மேலே எடை ஏற்றி
உருவங்களை மாற்றி ..
ஆட வைத்து மகிழ்வாய்
அடியே வேணாம் சீண்டலே ….
அழையாமலே உடல் வீழ்ந்து
ஆடி பாடும் வெண்பனியே …
சொல்லாமலே மறைந்த தென்ன..?-என்
சொந்தமே பிரிந்ததென்ன …?
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/02/2019