அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்
அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ,அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு நான் ஓர் அன்பான வேண்டுகோள்.
அன்புள்ள தம்பி தங்கை அண்ணா அக்கா நீங்கள் யாரெல்லாம் youtube வைத்திருக்கிறீர்களோ தயவுசெய்து இதை பார்க்கவும்.
உங்களுக்கு நான் செலவிடுகின்ற ஒவ்வொரு நிமிடமும் எனது பரப்புரைக்காகவோ அல்லது எனது இலாப நோக்கங்களுக்காகவோ அல்ல.
நான் ஒரு சாமானியன் என்பதை நீங்கள் என்னுடன் அருகில் நிற்கும் போது நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள்.
நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு youtube வீடியோக்களும் நீங்கள் பதிவிடுகின்ற ஒவ்வொரு டிக் டாக் காணொளிகளும் உங்களுக்கானது.
அதை நீங்கள் பகிரும்போது உங்களுக்கு தான் லாபமாக போகுமே தவிர அதனால் எனக்கு கிடைக்கப் போவது தமிழ் மக்களுக்கு நான் யார் என்று உண்மையை சொல்லுவதற்குரிய சந்தர்ப்ப களம் மட்டும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.
உண்மையில் உங்களுக்கு உங்களுடைய யூடியூப் தளத்தைபிரபஞ்சம் ஆக்குவதற்காக நான் சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் போய் வருகின்ற பாதைகளில் சுவனோரங்கள் நின்று கூட உங்களுக்குரிய காணொளியை நான் தந்து விட்டு தான் போயிருக்கிறேன்.
அதற்குரிய காரணம் இன்றோ நாளையோ நான் காணாமல் ஆக்கப்பட்டாலும் ஆகுதியாக்கப்பட்டாலும் அல்லது மரணிக்கப்பட்டாலும் நான் உங்களுடைய நலம் சார்ந்து உங்களுடைய தளத்திற்கு தந்த ஒவ்வொரு வார்த்தைகளும் என்றுமே காற்றில் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மட்டுமே.
இருந்தும் ஒரு சிலர் அவற்றை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஒரு சில ரூபாய்களை உழைக்கலாம் என்பதற்காக நீங்கள் வெளியிடுகின்ற ஒவ்வொரு வீடியோக்களும் மக்களை பல தாகப் பாதிக்கும் தம்பி.
அதன் மூலம் நீங்கள் பணக்காரனாக வாழ்ந்து விட்டு போகலாம் ஆனால் A9 ரோட்டில் நிற்கின்ற ஒவ்வொரு ஏழையின் இதயத்திலும் நீங்கள் கத்தியை ஏத்துகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.
கருத்துக்களை கருத்துகளாக பதிவிடுங்கள்.
சொல்பவற்றை முழுமையாக பதிவிடுங்கள்.
நான் உங்களுக்காக வாழ்வேன்.
ஆதலால் தயவுசெய்து முதுகில் குத்துகின்றதைப் போன்ற பதிவுகளை இட வேண்டாம்.
இப்படிக்கு உங்கள் அண்ணா அர்ச்சுனா…
என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார் .
- பிரென்ட் எண்ணெய் விலை 90 டாலரைத் தாண்டியது

- 40000 இலஞ்சம் கோரியதாகக் கூறப்படும் தொழில்நுட்ப அதிகாரி கைது

- பிரிட்டன் உள்ளிட்ட 40 நாடுகளுக்கு விசா இலவசம்

- 1948 ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக புதிய குடிவரவு மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது

- கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ரஜித சேனரத்ன

- 14 சுரங்கத் தொழிலாளர்கள் பலி

- 30,000 மெட்ரிக் டன் நெல் அரைக்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது

- சிரியாவின் முன்னாள் அதிபர் அசாத்துக்கு அவர் இல்லாத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது

- லங்கா மெட்ரோ டிரான்சிட்டை விரிவுபடுத்த ரூ. 1 பில்லியனுக்கும் அதிகமான நிதிக்கு ஒப்புதல்

- நொரோச்சோலை நிலக்கரி கொள்முதலுக்கு இரண்டு விநியோகஸ்தர்கள் தேர்வு








