
அர்ச்சுனா சஜித்துடன் இணைவு
அர்ச்சுனா சஜித்துடன் இணைவு என்பதாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது முகநூல் பதில் தெரிவித்துள்ளார் .
மக்கள் பணி இன்றுடன் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .இந்த விடயம் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இடம்பெற்றுள்ளது.
அரசியலுக்குள் அவர் வருகை தருகிறார் என்ற முன் அறிவிப்பாக இது காணப்படுகிறது .
மக்கள் பணியே தனது முதல் பணி எனவும் நான் ஏதும் தவறிழைத்து இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
அவர் கூறிய அந்த முகநூல் பதிவு கீழே பார்க்க ….
எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்து வெகு நாட்களாகிறது.
இந்தப் பெரும் சுமையை எனது சின்ன கைகளில் சுமத்தி அழகு பார்க்கும் எனது இனிய தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களுடைய இந்த நம்பிக்கையை இந்த கணத்தில் நான் பிழையான வழியில் அவமதிப்பேன் என்றால் எனது வீரம் செறிந்த தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகி நானாகத்தான் இருப்பேன்.
இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணா மார்கள் அக்கா மார்கள் தம்பிகள் தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது மட்டுமே.
எப்போதுமே உங்கள் நம்பிக்கை புதல்வனாக இருந்து மரணிப்பேன் என்று சொல்லிக் கொண்டு இனிவரும் காலங்கள் எமக்கு மிக முக்கியமான காலமாக இருக்கும்என்பதை நான் அறிவேன் என்பதையும் சொல்லிக் கொண்டு
எனக்கான மக்களின் போராட்டத்தில் இன்றிலிருந்து நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன் என்பதை சொல்லி இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன்.
நாங்கள் மீண்டும் சந்திப்போம்.
என தெரிவித்துள்ளார் .
- தேனிசை செல்லப்பாவின் 84வது பிறந்த நாள்
- ஈஸ்டர் தாக்குதலை வைத்து அரசு அரசியல் செய்கிறது நாமல் ராஜபக்ச
- பருத்தித்துறையில் மூதாட்டி ஒருவர் அடித்துக் கொலை
- வீட்டை கேட்டு கடிதம் வந்தால் ஒப்படைப்பேன் மைத்திரிபால சிறிசேன
- அனுரகுமார திசாநாயக்க மீது கடுமையான தேர்தல் சட்ட மீறல்கள்
- அமைச்சர் பங்களாக்களில் பெறுமதியானவை மாயம்
- ஜனாதிபதி நிதி விசாரணை மைத்திரி CID யில் முன்னிலை
- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
- தியாகதீபம் அன்னை பூபதி அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நினைவேந்தல்
- இளைஞன் அடித்துக்கொலை