அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
Spread the love

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

சிந்தை தளரா சிரித்து நடப்பவன்
சிகரம் உயர எழுந்து வெடித்தவன்
கள்ளம் இல்லா பேசி நடப்பவன்
கயவர் சூழ்ச்சி தோலுரிப்பவன்

விந்தை செய்திட விண்ணை அளப்பவன்
விடியல் பெற்றிட புரட்சி செய்பவன்
என்ன கேட்டாலும் எடுத்து உரைப்பவன்
எதற்கும் அஞ்சா எங்கும் நடப்பவன்

வெள்ளை வேட்டியை கதற வைத்தவன்
வெருட்டி வந்தாரை வாயில் அடித்தவன்
தோட்டா துளைக்க தலையை தந்தவன்
தோடுகள் பொங்கிட விதையை எறிந்தவன்

அண்ணன் பெயரை சொல்லி நடப்பவன்
அந்த வரலாறு மீட்டி படிப்பவன்
காலம் அறிந்து களம் திறந்தவன்
கரிகாலனாய் ஆகி நிற்பவன்

எட்டு திசையும் அலற வைத்தவன்
எரிமலையாய் பொங்கி வெடிப்பவன்
பாட்டன் பேரனை படைக்கு அழைத்தவன்
பாமர மக்களை நெஞ்சில் தரித்தவன்

அந்த மனிதன் இன்று யாராடா
அவன் எங்கள் அர்ச்சுனா காணடா
வீரம் விளைந்த மண்ணில் உதிர்த்தவன்
அவனை பாடடா அகிலம் போற்ரடா

இன்றைய மண்ணின் எழுச்சி இவனடா
எடுத்து கொஞ்சம் உலகம் பரப்படா
அடித்து புரட்டி எழுதினேன் நானடா
அணல் வரி வன்னி மைந்தண்டா !


போற்ரடா

வீடியோ