வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு
இன்று (05) காலை வெலிவேரிய, அம்பறலுவ வீதி, ஜூபிலி மாவத்தை பகுதியில் காரில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் மோட்டார் சைக்கிளை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு சிறிய லொறியில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு
காயமடைந்தவர் உடுகம்பொல, மாதல்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
அவர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- தங்கல்லே கடற்பகுதியில் காணாமல் போன 19 வயது இளைஞரின் சடலம் மீட்பு

- இலங்கை கடற்படையின் புதிய தளபதியான வைஸ் அட்மிரல் டாமியன் பெர்னாண்டோ

- டெங்கு அரச அலுவலகங்கள் பூட்டு

- 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட உரை நவம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது

- ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான ஈரான் தாக்குதல் 10 இந்தியர்கள் மீட்பு ஒருவர் மாயம்







