வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
பேலியகொடையில் இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தகராறில் ஏற்பட்ட மோதலின் போது போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது, நான்கு வாள்களை வைத்திருந்த 23-35 வயதுடைய எட்டு ஆண்களும், 26, 46 மற்றும் 47 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாள்களுடன் மோதலில் ஈடுபட்ட போதைப்பொருள் வியாபாரிகள் அதிரடி கைது
தகவல்களின்படி, கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் பல குற்றங்களுக்காக பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர்கள்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளில், வெளிநாட்டில் மறைந்திருந்து வியாபாரி ஒருவரால் நடத்தப்படும் போதைப்பொருள் கடத்தலுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை
- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி
- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது
- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி
















