வட்டுக்கோட்டை சம்பவம் பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது
சித்தங்கேணி இளைஞன் விவகாரத்துடன் தொடர்புடைய நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இளைஞனின் உயிரிழப்பு மனித உயிர் போக்கல் அல்லது ஆட்கொலை என்ற நிலைப்பாட்டுக்கு நீதிமன்றம் வந்திருந்தது.
இதனையடுத்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வட்டுக்கோட்டை சம்பவம் பொலிஸ் அதிகாரிகள் அதிரடி கைது
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கடந்த 11 ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரினால் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவரில்
ஒருவரான நாகராஜா அலெக்ஸ் என்பவர் திடீரென சுகவீனமடைந்த நிலையில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு
- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்
- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி
- வில்பட்டு தேசியப் பூங்காவில் கரை ஒதுங்கிய இறந்த டால்பின்
- தானசாலை வாக்குவாதம் ஐவர் கைது
- நெல்லை வாங்க மறுக்கும் அரசு விவசாயிகள் குமுறல்
- வேலைக்கு ஆள் இல்ல வெளிநாட்டவர்களை இறக்க தயாராகும் அரசு
- பக்தர்களுக்கு வெற்றிலை புகையிலை வழங்கியவரை தூக்கிய அனுரா அரசு
- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது
- முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடியிடம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தியது
















