லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து

லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து
Spread the love

லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து

லண்டன் ; கிழக்கு லண்டன் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆமை ஒன்று காணப்பட்டதால் அந்த வழி போக்குவரத்து தடை பட்டது .

கிழக்கு லண்டன் Norwich and Cambridge. இடையில் பயணிக்கும் ரயில்வே தண்டவாளத்தில் காயமடைந்த நிலையில் ஆமை ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது.

குறித்த ஆமையை அவ்வழியால் பயணித்த பயணிகளில் ஒருவர் படம் பிடித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் குறித்த பகுதியில் தண்டவாளத்தில் ஆமை ஒன்று உள்ளது எனவும் காயமுற்ற நிலையில் உயிருடன் உள்ளது என அவர் பதிவிட்ட நிலையில் இந்த காட்சி பதிவு விலங்குகள் அமைப்பின் கவனத்திற்கு ரயில்வே நிலையத்தின் கவனத்திற்கும் பறந்து சென்றது .

லண்டனில் ஆமையால் தடை பட்ட ரயில் போக்குவரத்து

விரைந்து செயல் பட்ட ரயில்வே அதிகாரிகள் அந்த வழி ரயில் போக்குவரத்தை தடை செய்து ஆமையை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ஆமை ரயில்வே தண்டவாளத்தில் காணப்பட்டத்தை அடுத்து மதியம் ஒன்று முப்பது மணியளவில் ரயில்வே பயணம் சில மணிநேரம் தடை பட்டது .

விலகுங்கள் மீது மக்கள் எவ்விதம் அக்கறையுடன் உள்ளனர் என்பதனை இந்த ஆமை மீட்பு விடயங்கள் எடுத்து காட்டுகிறது .


ஆனால் நம்ம இலங்கை இந்தியாவில் கண்ணுற்றால் அதனை கல்லால் அடித்து கொன்று விடுவார்கள்.

இது அவர்கள் சிந்தனை ,வெள்ளையர் நாடுகளை போல விழிப்புணர்வு அற்ற தேசமாக இலங்கை இந்திய மக்கள் வசித்து வருவது கவனிக்க தக்கது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *