யாழ்.விபத்தில் 11 பேர் காயம்
யாழ்ப்பாணம், கண்டி ஏ-9 வீதியில் கொடிகாமம் எனுமிடத்தில் தனியார் பஸ்ஸொன்றும் வானும் மோதி புரண்டதில், 11 பேர் காயமடைந்து, சாவக்கச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் வரையில் பயணித்த தனியார் பஸ், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் முன்பாக வந்துக்கொண்டிருந்த வானில் மோதியுள்ளது. விபத்தில் சிக்கி பஸ், வீதியோரத்தில் புரண்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்கள் இருவர் இருக்கின்றனர் என்று தெரிவித்த பொலிஸார், காயமடைந்தவர்கள் பாரிய ஆபத்து எதுவுமில்லை என்றனர்.
No posts found.






