யாழில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது
வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கோப்பாய் கொட்டைக்காடு பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தின் மூன்று திறந்த பிடியாணைகள் விடுவிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகி இருந்தபோது குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் கோப்பாய் பொலிஸாரும் இணைந்து கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
சந்தேக நபரிடம் இருந்து 15 லீற்றர் கசிப்பும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
- காணாமல் போன மருத்துவர் சடலமாக மீட்பு
- கல்நேவாவில் கால்வாயில் விழுந்த இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 94,000-ஐத் தாண்டியது
- ஓமன் வெளியுறவு அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெஹ்ரான் செல்கிறார்
- வறண்ட வானிலை காரணமாக தீவு முழுவதும் உள்ள நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 36% ஆகக் குறைந்துள்ளது











