யாழில் பெட்ரோல் குண்டு தாக்குதல்
அச்சுவேலி, பத்தமேனியிலுள்ள வீடு ஒன்று நேற்று (18) இரவு 9.20 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசி சேதமாகப்பட்டுள்ளது.
முகத்தை துணியால் மறைத்தவாறு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த வீட்டில் ஜன்னல் கதவு என்பவற்றை அடித்து உடைத்து பெட்ரோல் குண்டு வீசி வீட்டின் பல பொருட்களை எரித்து சேதமாக்கியுள்ளனர்.
வீட்டில் இருந்த 42 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயார் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
- 13 பில்லியன் தேசிய அபிவிருத்தி வங்கி மோசடி

- மீன் விநியோகத்தை மேம்படுத்த ரூ. 200 மில்லியன் மதிப்புள்ள குளிரூட்டப்பட்ட சரக்குந்துகளை ஜப்பான் நன்கொடையாக வழங்கியது

- நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிப்பதில் தாமதம் குறித்து சஜித் கவலை

- சல்லேயின் நீட்டிக்கப்பட்ட தடுப்புக்காவல் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கவலை

- மூன்று நாள் டெங்கு பிரச்சாரத்தின் போது 2000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு







