யார் மேல் குற்றம்
உன்னை நானும் பார்க்கல
உன் உறவை நானும் கேட்கல
என்னை நீயும் தேடல
என்ன கேட்டாய் கேடில
பொல்லா வார்த்தை போடுறாய்
போலியாக தூவுறாய்
கண்ணா என்ன கேட்கிறாய்
காதில் என்ன ஓதுறாய்
விண்ணில் ஏறி பறக்கத்தான்
விண் வெளியை அளக்கத்தான்
காடு மலை ஏறுறேன்
கண்ணாம் பூச்சி ஆடுறேன்
ஓடுகிற ஆற்றில -காற்று
ஆடும் அந்த ஆற்றிலே
ஓங்கி எழும் அலையிலே
ஓர் தேசம் நனையுதே
எல்லாம் இங்கு ஒண்ணுதான்
ஏழை இங்கு பாவம் தான்
சொன்னா இங்கு கேடுதான்
சொல்லாம தூங்குறான் ……
ஆக்கம் – 09-05-2025
வன்னி மைந்தன்






