முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று (28) மீட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் இலங்கை விமானப் படையில் விமானப் படை வீரராக பணிபுரிந்த நிலையில், அதிலிருந்து விலகியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரங்குளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழு சம்பவ இடத்திற்கு சென்றதுடன், முதற்கட்ட விசாரணைகளையும் மேற்கொண்டனர்.
முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு
இதன்போது புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல் பிரிவினரும் சம்பவ இடத்தில் விசாரனைகளை முன்னெடுத்தனர்.
மேலும், பொலிஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், அங்கு பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இது ஒரு கொலையாக இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், பல கோணங்களில் விசாரணைகளையும், முறைப்பாடுகளையும் பதிவுசெய்து வருவதாகவும் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் , சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை நடத்தியதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு
- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை
- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்
- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்
- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்
- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு
- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது
- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது
- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்
- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா
















