முகக்கவசம் இன்றி நடமாடிய 377 பேரில் 3 பேருக்கு கொரோனா

Spread the love

முகக்கவசம் இன்றி நடமாடிய 377 பேரில் 3 பேருக்கு கொரோனா

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து ரபிட் ஆன்டிஜன் அல்லது பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்துகின்ற திட்டத்தின்

மூலம் நேற்றைய தினம் (07) கைது செய்யப்பட்டவர்களில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடிக் கொண்டிருந்த 377 பேர் நேற்றைய தினம் கைது

செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுள் 220 பேர் ஆன்டிஜன் பரிசோதனைக்கும், 157 பேர் பி.சீ.ஆர் பரிசோதனைக்கும்

உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை மீன் கடைகள், மரக்கறிக் கடைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் கொரோனா

தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *