மஹிந்தாவின் மகன் வைத்திருந்த 7துப்பாக்கி
மஹிந்தாவின் மகன் வைத்திருந்த 7துப்பாக்கி தற்பொழுது பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மஹிந்தாவின் மகன் யோசித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் எப்படி ஏழு துப்பாக்கிகளை இலங்கையில் வைத்திருக்க முடியும் என்கின்ற கேள்வி இதன் மூலம் எழுப்பப்பட்டுள்ளது.
சகோதரன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்கின்ற காரணத்திற்கு அமைவாக வைத்து இவருக்கு எப்படி இந்த ஏழு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன எனவும் .
எப்படி அது வழங்க முடியும் என்று இந்த கேள்வியை இந்த விடயம் எழுப்பி இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்திருக்கிற சட்டம் இலங்கையில் இருக்கிறது .
அதன் அடிப்படையில் பாதுகாப்பு அமைக்க பதிவு செய்யப்பட்டு இவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அரசியல்வாதியின் மகன் என்கின்ற காரணத்தினால் ,எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொள்ளாத ஒருவர் 7 துப்பாக்கிகள் வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் கொதிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது .












