மலையகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான சுகாதார
விழிப்புனர்வு குறைவு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்போது நாடு முழுவதும் வௌ;வேறு காலங்களில் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கபட்டு
வருகின்றது. இதன் பயனாக பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கையில் வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில்
மாற்றம்பெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால் மக்கள் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
விளகி இருத்தல் தனிமைபடுத்தல் மக்களின் தானதாக ஊரடங்கு உட்பட அரசாங்கம் கூறும் வைரஸ் பரவாமல் இருக்க கூறும்
பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றுதல் ஊரடங்கு சட்டத்தை கடைபிடித்தல் காரணமாக பல நாடுகளில் கொரோனா வைரஸ்
பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை எமது நாட்டு மக்களும் பின்பற்ற வேண்டும். இந்நிலையில் எமது நாட்டின்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் செயற்பாடுகளும் பாராட்டதக்க ஒன்றாகும்.
இந் நிலையில் மேற்படி சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளை மலையகத்தில் சில தோட்டங்களில் முன்னெடுத்தாலும் பல
தோட்டங்களிலும் மலையக நகரங்களிலும்; முன்னெடுத்து வருவதாக தெரியவில்லை. கொழும்பு மற்றும் பிற நகர்களில்
தொழில் புரிந்த இளைஞர்கள் தற்போது தோட்டங்களுக்கு படையெடுத்துள்ளனர். இவர்களும் உல்லாச ஹோட்டால்களிலும்
பல்வேறு நிறுவனங்களிலும் தொழில் புரிந்தவர்கள். சிலர் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ளனர். இவர்கள் மூலமாகவும்
கொரோனா வைரஸ் தோட்டங்களுக்கு பரவுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதனால் மேற்படி சுகாதார பாதுகாப்பு செயற்பாடுகளை
முன்னெடுக்க வேண்டும். தற்போதும் இந்த இளைஞர்கள் சுற்றி திரிவதையும் விளையாடுவதையும் காணக் கூடியமாக இருக்கின்றது.
தற்போது தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் இல்லை. ஒரு சில தோட்டங்களுக்கு அவை வழங்கப்பட்டு உள்ளதாக
செய்திகள் வெளியானாலும் பெரும்பாலான தோட்டங்களில் அவை வழங்கப்படவில்லை. அவர்கள் பாதுகாப்பு முக கவசங்கள்
இல்லாமலே தேயிலை மலைகளில் தொழில் புரிந்து வருகின்றனர். இந் நிலை தொடருமானால் பெருந்தோட்டங்களில் இந்த நோய்
பரவுவதை தடுக்க முடியாது. எனவே இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..









