மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை
Spread the love

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை

மன்னாரில் பெண் சாவு மருத்துவ தவறு ஒத்துக்கொண்ட மருத்துவமனை,அர்ச்சுனா முன்னெடுத்த நீதி வெற்றி பெற்றது .

மருத்துவ மனையில் குழந்தை பெற்று இரத்த போக்கினால் மரணமான பெண் மரணம், மருத்துவர்களின் தவறு காரணமாக இடம்பெற்றது என்பது இப்பொழுது ஒப்பு கொள்ளபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மருத்துவ மனைகளின் நடமாடும் மாபியாக்கள் நடத்தும் மாபியா கொள்ளைகளை கட்டுப்படுத்தவேண்டிய நிலைக்கு தற்பொழுது தமிழர் சமூகம் மாற்றம் பெற்றுள்ளதை இவை காண்பிக்கின்றன .

தொடராக இடம்பெற்று வந்த மருத்துவ தவறுகள் காரணமாக எத்தனை உயிர்கள் மருத்துவமனைகளில் பலியானார்கள் என்பதற்கு, பட்டதாரி இளம் பெண் படுகொலை செய்யப்பட்டஇந்த சம்பவம் முன்னுதாரணமாக காணப்படுகிறது .

அடித்து கொளுத்த மருத்துவ மாபியாக்கள் மருத்துவ கொள்ளைதனை அடித்து நொறுக்கவேண்டிய காலம் இது .

காலெடுத்து வைத்து கரிகாலன் போலபடையெடுக்க வேண்டும் நிலை ஏற்படுத்த வேண்டும் .

மூச்சிழந்து மடிந்து போன அப்பாவி பெண்ணும் ,அதனால் தாய் இன்றி தவிக்கும் அந்த பச்சை சிசுவுக்கு எதை நாங்கள் கொடுக்க போகிறோம் என்றுகொஞ்சம் எண்ணிப்பார் ,எம்தமிழ கொஞ்சம் எண்ணி கொள் .

பொறுப்பற்று செயலாற்றும் பொறுப்பற்ற மருத்துவர்களின் அலட்சியமும் ,அதிகார துஸ்பிரயோகமும் அகற்ற பட வேண்டும் .

நோயோடு வருகின்றவர்கள் நோய் தீர்ந்து வீடு செல்லும் நிலை மற்றம் பெற வேண்டும்அதற்காக இந்த மன்னாரில் படுகொலை செய்ய பட்ட இளம் தாய்க்கு நீதி வேண்டும் .

குற்றவாளிகள் தண்டிக்க பட்டு சிறையில் அடைக்க படவேண்டும் என்பதே நமது கோரிக்கை .இது மக்கள்கோரிக்கை. புரிந்து செயலாற்றட்டும் மன்னார் மாவட்ட மருத்துவமனை . .