மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 5257 பேருக்கு பாதிப்பு

Spread the love

மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 5257 பேருக்கு பாதிப்பு

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 5,257 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு

அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

மகாராஷ்டிராவை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 5257 பேருக்கு பாதிப்பு
கொரோனா வைரஸ்
மும்பை:

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் ஐந்தாவது கட்டமாக ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் கொரோனாவின் கோரப்பிடியில் அதிகம் பேர் சிக்கிய மாநிலமாக உள்ளது. இங்கு

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 5 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்

கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 883 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 48 மணி நேரத்தில் 181 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அங்கு கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,610 ஆக

அதிகரித்துள்ளது. தற்போது 73 ஆயிரத்து 298 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *